Tuesday, February 9, 2010

என்னுயிரே..எந்தன்..

என் உயிரே..
என்னுயிரே..
எந்தன் இன்னுயிரே....
இப்படி
எத்தனை வார்த்தைகளால்
கவிதை எழுதினாலும்
என்ன....
என் பக்கம்
திரும்ப மறுக்கிறது
உன் மனசு..

உன் காதலுக்காக
ஏங்கிச் சாகிறது
என் மனசு..

Friday, February 5, 2010

உயிரே வருவாயா?

சங்கீத வானில்
சந்தோஷ மேகம்
பூமழை தூவும்
நேரம் இந்நேரம்..

எந்நாளும் நெஞ்சில்
ஏதோ ஒர் ஏக்கம்
உந்தன் பிரிவாலே
உள்ளத்தில் இருக்கும்..

வைகறையின் ராகம்
கேட்கின்ற நேரம்
உந்தன் குரலே என்
காதினுள் ஒலிக்கும்..

தினம் தினம் வானில்
வெண்ணிலவும் வந்து
உந்தன் முகத்தை
நினைவூட்டுகிறதே..

உயிரே வருவாயா..
நேசம் தருவாயா..
ஏங்கும் நெஞ்சின்
ஏக்கம் தீர்ப்பாயா..?

இதயம் எனும் குழந்தை..

ஆசைப்பட்ட பொருளுக்காக
அடம்பிடித்து
அழும்
குழந்தையைப் போலத்தான்
என் இதயமும்..
உன் காதலுக்காக
ஏங்கி அழும்
அந்த குழந்தையிடம்
என்ன சொல்ல?..
சொல்..சொல்..என்னுயிரே..?

Thursday, December 17, 2009

என்னோடு வருவாயா..?

நிழலாய் நீ
வருவாய்
என்றால் சொல்..
வாழ்க்கை பயணம்
தொடர்கிறேன்......
என்னோடு வருவாயா..?

Sunday, November 29, 2009


Monday, November 23, 2009

என்னை விட்டு போகாதே..

என்னை விட்டு போகாதே..
உலகமே
என்னை வெறுத்தாலும்
வருந்த மாட்டேன்..
நீ
என்னை விட்டு
விலகிச் சென்றால்
உயிர் வாழ
விரும்ப மாட்டேன்..

உன்னை சந்தித்த பிறகு..

உன்னை சந்தித்த பிறகு
பூமி இப்போது
மிகவும் அழகாய்..
மனிதர் எல்லோரும்
இனியவராய்..
ம்..

மொட்டை மாடியில்
அமர்ந்திருக்கையில்
'என்ன நிலவை
ரசிக்க ஆரம்ப்பித்துவிட்டாயா.'
என்று அக்கா சிரிக்கிறாள்..

ஏதாவது எழுத உட்கார்ந்தால்
'என்ன கவிதையா.'
கிண்டல் செய்கிறாள் தங்கை..
ம்..
என்னுள் நீ
எப்பொழுது நுழைந்தாயோ
அப்போது தொடங்கியது
என்னுடைய ஆர்ப்பாட்டம்..